கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த இளம் பெண் ஒருவர் தற்போது கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு விக்னேஷ் தன்னை அழைத்து சென்றதாக கூறியுள்ளார். மேலும், பல இடங்களில் ஊர் சுற்றியபோது ஓட்டலில் தனிமையில் ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
விக்னேஸ் உடன் நெருக்கமாக பழகியதில், தனக்கு குழந்தை உண்டாகி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருந்ததாகவும், அப்போது விக்னேஷின் பெற்றோர் தன்னை அழைத்து கர்ப்பத்தை கலைத்துவிட்டால் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறியதாக நம்பிக்கை கர்ப்பத்தை கலைத்து விட்ட நிலையில், விக்னேஷின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக போத்தனூர் மகளிர் காவல் நிலையத்திலும் கோவை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். தற்போது, வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். திமுகவை சேர்ந்தவர் என்பதால் காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
விக்னேஷுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டதாகவும், தற்போது தன்னை மீண்டும் ஆசைக்கு இணங்குமாறு அழைத்து மிரட்டுவதாகும். இல்லாவிட்டால் தாங்கள் காதலித்தபோது எடுத்த புகைப்படங்களையும் தனிமையில் இருந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டி வருவதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். எனவே தன்னை ஏமாற்றியதோடு மட்டுமல்லாமல் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுத்த விக்னேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம் பெண் சினேகா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் டாப் இயக்குனர் “பாகுபலி” என்ற பிரம்மாண்ட திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. அதுவரையில்…
கடைசி திரைப்படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து…
விசிக கட்சி திருச்சியில் மே-31 நடத்த உள்ள "மதசார்பின்மை காப்போம்" என்ற பேரணி குறித்து வேலூர்,88o திருப்பத்தூர், ராணிப்பேட்டை,9 திருவண்ணாமலை…
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள 9…
அரசியல்வாதி பிரகாஷ் ராஜ் பிரகாஷ் ராஜ் சமீப காலமாகவே பாஜவை விமர்சித்தே பேசி வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு…
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படடன. கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல்…
This website uses cookies.