தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள குளத்துவாய்பட்டியில் வசித்து வருபவர் கண்ணன் (48), இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
இவரது மனைவி கிருஷ்ணவேணி (46), தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கோபித்துக் கொண்டு ஓடிய கிருஷ்ணவேணி அருகேயுள்ள நல்லப்ப நாயக்கர் தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின்னர், இவரை பின்தொடர்ந்து வந்த கணவர் கண்ணனும் கிணற்றுக்குள் குதித்து மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார். இந்நிலையில் கினற்றில் தத்தளித்த இருவரையும் தம்பதியரின் மகளான அபரணா தோட்டத்தில் கிடந்த கயிற்றை கிணற்றுக்குள் வீசியுள்ளார்.
அதனைப் பிடித்து தொங்கியவாரே மனைவியை காப்பாற்ற கண்ணன் போராடி வந்தார். இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் குதித்து இருவரையும் பத்திரமாக மீட்க கடுமையான போராட்டம் நடத்தவேண்டி வந்தனர்.
இதனையடுத்து, கிருஷ்ணவேணி தன்னை காப்பாற்ற வேண்டாம் என கூச்சலிட்டு நீண்ட நேரம் போராடினார். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு கிருஷ்ணவேணியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.