திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள வன்னி கோணேந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சமரச செல்வி. இவர் இன்று தனது பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அப்போது அவர் கையில் சுமார் 5 அடி நீளம் கொண்ட இறந்த நிலையில் உள்ள பாம்புடன் அலுவலகத்திற்குள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த காவல்துறையினர் விரைந்து சென்று பாம்பை அவர்களிடமிருந்து மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது சமரச செல்வி கூறுகையில் – தமிழக அரசின் பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இலவச வீட்டிற்கு பல ஆண்டுகளாக மின் இணைப்பு கேட்டு தரவில்லை. அவ்வப்போது பாம்புகள் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இதனால் எங்களுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது.
மின் இணைப்பு வழங்கப்படாததால் எனது மகளும் படிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. நேற்று எங்களுடைய வீட்டில் புகுந்த பாம்பை அடித்துக் கொன்று இன்று காலை நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்து உள்ளோம் என்றார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.