திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரின் மனைவி சுமதி(வயது 42). சலவை தொழிலாளியான ரவிக்குமாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரின் மனைவி சுமதி திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(வயது 30) என்பவருடன் சுமதிக்கு செல்போன் மூலமாக தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. கள்ளத்தொடர்பில் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர்.
இது சுமதியின் உறவினர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் சுமதியையும் கண்டித்துள்ளனர். இதனால் சுமதி, மாரிமுத்துவிடம் கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதன் பின்னர் மாரிமுத்து சுமதியை பார்க்க வந்தபோது அவர் பேச வில்லை. மேலும் மாரிமுத்துவின் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை.
கள்ளக்காதலி திடீரென கள்ளதொடர்பை துண்டித்துக்கொண்டதை மாரிமுத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுமதியிடம் நேரில் வந்து உல்லாசத்திற்கு அழைத்த போதும் சுமதி செல்ல மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து, இன்று சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் காத்திருந்து உள்ளார். வேலைக்கு செல்வதற்காக அங்கு வந்த சுமதியை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் கதறி துடித்த சுமதி தப்பித்து ஓடி உள்ளார்.
ஆனால் தொடர்ந்து விரட்டி சென்று ஆத்திரம் தீரும் வரை மாரிமுத்து குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுமதி அங்கேயே சரிந்து விழுந்தார். இதனை கண்ட பொதுமக்கள் மாரிமுத்துவை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி உள்ளனர். மேலும் அவருக்கு தர்ம அடி விழுந்துள்ளது. இது குறித்து வாத்தலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுமதியை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் கொண்டு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
பொதுமக்களால் தாக்கப்பட்ட மாரிமுத்துவை வாத்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுகாம்பூர் பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.