சிகிச்சைக்காக வந்த பெண்.. ‘பேண்ட்-ஐ’ கழட்ட சொன்ன மருத்துவர் : அடுத்த நடந்த அதிர்ச்சி.. கண்ணிமைக்கும் நேரத்தில் ட்விஸ்ட்!!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அனுமந்த உபாசகர் நகரில் 24/7 POISON AND EMERGENCY CARE என்கிற தனியார் மருத்துவமனை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் பல் மருத்துவரான அர்ச்சனா என்பவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
இதனை தொடர்ந்து 24/7 மருத்துவமனையின் மருத்துவரான தியாகராஜன் அர்ச்சனாவை உனக்கு பரிசோதனை செய்ய வேண்டும். நீ உன்னுடைய பேண்ட்டை கழட்டு என்று கூறியுள்ளார்.
பின்னர் வயிற்று வலிக்கு எதற்கு பேண்டை கழட்ட சொல்கிறீர்கள் என கூறியுள்ளார். பின்னர் பல் மருத்துவரும் மருத்துவர் தியாகராஜனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கையில் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த உறவினர்களான போஸ்கோ நகர் பகுதியில் சேர்ந்த சுரேந்திரன், நரேஷ், கோகுல், ராகுல் ஆகியோர் மருத்துவர் தியாகராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர் மருத்துவமனையில் உள்ள கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். மேலும் இது குறித்து அர்ச்சனா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் நகர போலீசார் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்து பின்னர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பின்னர் நகர காவல் துறையினர் மருத்துவரான தியாகராஜனை காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
பின்னர் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய நான்கு இளைஞர்களும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் திருப்பத்தூர் நகர பகுதியில் சிகிச்சைக்காக வந்த பெண் மருத்துவரை மருத்துவரையே பாலியல் தொல்லை கொடுத்தது சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.