Categories: தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை வைத்து தினமும் மது அருந்திய பெண் : குடும்பத்தினருக்கு காத்திருந்த ஷாக்!

மகளிர் உரிமைத் தொகை வைத்து தினமும் மது அருந்திய பெண் : குடும்பத்தினருக்கு காத்திருந்த ஷாக்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பாலகங்காதரதிலகர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் திருவிழாவில் கடைகளில் பொருட்கள் விற்பவர்.

இவரது மனைவி கீதா (வயது 54) இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். கீதா குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.

கீதாவிற்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளது. இதனால் அடிக்கடி டாஸ்மாக் மது கடைக்கு சென்று மது பாட்டில்கள் வாங்கி குடித்துவிட்டு போதையில் எங்கேயாவது தூங்கிவிட்டு ஒரு நாள் கழித்து வீட்டிற்கு வருவதுண்டாம்

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வந்துள்ளது.

அந்தத் தொகையை வீட்டில் உள்ளவர்களிடம் வியாழக்கிழமை வற்புறுத்தி வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பவில்லை.

கீதா வழக்கம் போல் எங்காவது குடித்துவிட்டு கையில் இருந்த பணம் செலவான பின்னர் வீடு திரும்புவார் என வீட்டில் உள்ளவர்கள் நினைத்திருந்தனர்.

இந்நிலையில் மதியம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி சாமியார்மலை அருகே உள்ள டாஸ்மாக் மது கடைக்கு சற்று தொலைவில் பெண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக குடியாத்தம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்

தகவல் அறிந்து விரைந்து வந்த நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்து கிடந்தது கீதா என தெரிய வந்தது. கையில் இருந்த பணத்திற்கு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி அங்கேயே நேற்று முன்தினத்தில் இருந்து குடித்துக் கொண்டிருந்ததாகவும் அப்பகுதியில் இருப்பவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதனையடுத்து போலீசார் கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க: சிறுமி கொலை? தலையில்லாமல் எரிந்து கிடந்த எலும்புக்கூடு : ஆடு மேய்க்க சென்றவர்கள் அதிர்ச்சி!

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற்றுக்கொண்டு அளவுக்கு அதிகமாக பெண் ஒருவர் குடித்து இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.