காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருகாலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன் என்பவர் தன்னுடைய மனைவி இளவரசியுடன் (வயது 36) வாடகை வீட்டில் மேல் மாடியில் குடியிருந்து வருகிறார்.
இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மோகன் பயோ கவர்களை ஏஜென்சி எடுத்து கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்.
இன்று மாலை காஞ்சிபுரம் நகரில் பலத்த சூரைக்காற்றுடன் லேசான தூறல், இடி மற்றும் மின்னல் அவ்வப்போது ஏற்பட்டது. இளவரசி வீட்டின் மாடியில் நடந்து கொண்டிருந்தபோது இவர் அருகே மின்னல் தாக்கியுள்ளது. அந்த அதிர்ச்சியில் இளவரசி மூர்ச்சையாகி விழுந்து விட்டார்.
அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை மேற்கொண்டதில் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் மின்னல் தாக்கிய அறிகுறிகள் ஏதும் இளவரசியின் உடலில் காணப்படவில்லை என்றும் மின்னல் தாக்கிய அதிர்ச்சியிலேயே உயிரிழந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக தாலுக்கா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.