நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48) மனைவி சுகுணா(43) நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி உள்ளனர்.
இன்று அதிகாலை 5மணி அளவில் கணவர் நந்தகுமார் நடைப்பயிற்சி செல்வதற்காக வீட்டின் கதவை திறந்து வெளிய சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த மர்ம நபர் வீட்டின் உள்ளே புகுந்து உறங்கிக் கொண்டிருந்த நந்தகுமார் மனைவி சுகுணா அணிந்திருந்த 8 பவுன் (தாலி)செயினை பறித்துச் சென்றதாகவும், தூக்கத்திலிருந்து விழித்த சுகுணா கூச்சிலிடுவதற்குள் மர்ம நபர் வீட்டில் இருந்து வெளியே ஓடியதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சுகவனம் சம்பவம் தொடர்பாக பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டும்,வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
This website uses cookies.