தமிழகம்

பெண்ணிடம் இருந்த பணப்பையை துணிகரமாக கொளையடித்த பெண்கள்.. விரட்டி புரட்டியெடுத்த சிங்கப்பெண்..(வீடியோ)!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் இவரது மனைவி மஞ்சுளா(வயது48), இவர் மாமல்லபுரம் பஸ் நிலையம் அருகில் கட்டண கழிப்பித்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மஞ்சுளா தனது குடும்ப தேவைக்காக மாமல்லபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இன்று ரூ.55 ஆயிரம் பணம் எடுத்து கொண்டு ஒரு பிளாஸ்டிக் கவரில் அதனை போட்டு கொண்டு வங்கி வாசல் படியை தாண்டி செல்லும் போது, அங்கு வங்கி வாசலில் வாடிக்கையாளர் போர்வையில் அமர்ந்து இருந்த 3 வட மாநில பெண்கள், மஞ்சுளா சுதரிக்கும் நேரத்தில் பிளாஸ்டிக் கவரை பிளேடால் கீறி அறுத்துவிட்டு, ரூ 55 ஆயிரத்துடன் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

பிறகு சுதாரித்து கொண்ட மஞ்சுளா தன்னுடைய பணத்தை எடுத்து கொண்டு அப்பெண்கள் ஓட்டம் பிடிப்பதை கண்டு, கையில் பணத்துடன் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணை துரத்திபிடித்தார். நடுரோட்டிலேயே தலைமுடியை பிடித்து மஞ்சுளா அப்பெண்ணுக்கு தர்மஅடி கொடுத்தார்.

அதற்குள் அங்கு பொதுமக்கள் கூடிவிடவே ஒரு ஆட்டோவில் தப்ப முயன்ற மற்ற 2 பெண்களையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பிறகு தகவல் அறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் போலீசார் 3 பெண்களையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தியதில் 3 பேரும் மத்திய பிரதேசம் மாநிலம், ராஜ்புத் மாவட்டம், ஜான்டிகடை கிராமத்தை சேர்ந்த நிஷா(வயது35), பூஜா(வயது30), பிரவீனா(வயது40) என தெரிய வந்தது. ஒரே ஊரை சேர்ந்த இந்த 3 பெண்களும், அரசு பஸ்சில் பயணிக்கும் பெண்களிடம நகை, பர்சு பறிப்பது போன்ற குற்ற செயல்களில் பல்வேறு இடங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

பிறகு மஞ்சுளாவிடம் திருடி சென்ற ரூ.55 ஆயிரம் பணத்தை அந்த பெண்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்து அவரிடம் ஒப்படைத்தனர். பட்டப்பகளில் வட மாநில பெண்கள் வங்கி வாசலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் மாமல்லபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களில் பூஜா என்பவரை ஒரு சிங்கப்பெண் போல் துரத்தி சென்று மடக்கிபிடித்து தர்மமடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த மஞ்சுளாவின் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் பொதுமக்கள் பலர் பாராட்டினர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

15 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

15 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

16 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

17 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

17 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

18 hours ago

This website uses cookies.