கன்னியாகுமரி : நிறுத்தி இருந்த அரசு பேருந்து திடீரென இயங்கியதால் சாலையை கடந்து சென்ற வாலிபரின் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கி விபத்துக்குள்ளான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து தேங்காய்பட்டிணத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து ஒன்று இன்று மதியம் காப்புகாடு சந்திப்பு பகுதியில் வந்து பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் ஏற்றி செல்ல நிறுத்தப்பட்டது.
பின்னர் பயணிகளை ஏற்றிவிட்டு நகரும் போது, சாலையின் மறுபுறத்தில் இருந்து வந்த வாலிபர் பேருந்து முன் கடந்து செல்லும் போது, பேருந்து மெதுவாக இயங்கி சென்று வாலிபர் மீது மோதியது.
இதில் வாலிபர் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சக்கரம் வாலிபரின் மேல் ஏறி இறங்கி உள்ளது. உடனே பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி விட்டு பார்த்தபோது வாலிபர் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு காயம் பலமாக இருந்ததால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கடை போலீசார் விபத்தில் சிக்கிய அரசு பேருந்தை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தில் சிக்கிய வாலிபர் நித்திரவிளை அருகே இரையுமன்துறை சுனாமி காலனி பகுதியை சேர்ந்த நபர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விபத்து சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.