ஊது ஊதுனு சொல்றீங்க இதென்ன மகுடியா? போலீசாருக்கு டஃப் கொடுத்த இளைஞர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
என்ன சார் ஊது ஊதுனு சொல்றீங்க,இது என்ன மகுடியா ஊதுறதுக்கு?போட்டோ எடுத்த போலீசாரிடம் போஸ் கொடுத்து வம்பிழுத்து இறுதியில் காலில் விழுந்து கெஞ்சிய போதை ஆசாமி.
கோவை மாவட்டம் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் கெளதம். மினி ட்ரக் ஓட்டுநரான இவர் சம்பவத்தன்று இரவு மினி ட்ரக்கில் சிந்தாமணிபுதூரில் இருந்து சூலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாப்பம்பட்டி பிரிவில் நின்று கொண்டு இருந்த கார் மீது மினி ட்ரக் லேசாக உரசி உள்ளது.இதனை பார்த்த அங்கிருந்த இளைஞர்கள் மினி ட்ரக்கை வழிமறித்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது கௌதம் தனது நண்பனுடன் அதீத போதையில் வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து இளைஞர்கள் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் அங்கு வந்த சூலூர் போலீசார் கௌதமை விசாரித்தபோது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கௌதம், தான் குடிக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சூலூர் போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் மினி ட்ரக் ஓட்டுனர் கௌதம் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.