20 வருஷமா ரோடு சரியில்லை.. திமுக வேட்பாளரிடம் கேள்வி எழுப்பிய இளைஞர் : பிரசாரத்தை முடித்து தங்கத்தமிழ்செல்வன் ஓட்டம்!
தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய பகுதியில் தேனி மக்களவை வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் 28 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
இதில் மாலையில் எ.புதுப்பட்டி ஊராட்சி, கீழவடகரை ஊராட்சி, வடுகபட்டி பேரூராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.
இறுதியாக கீழவடகரை ஊராட்சியின் அழகர்சாமிபுரம் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது, அழகர்சாமிபுரம் அண்ணா நகரை சேர்ந்த ஜெகதீஸ் என்ற இளைஞர் தங்களது பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தரவில்லை என கூறி பரப்புரையின் போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பினார்.
அப்பொழுது தங்கதமிழ்செல்வன் பேச்சை நிறுத்தி தம்பி நான் காலையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறேன், தொண்டை வலிக்கிறது, கொஞ்சம் அமைதியாக இரு, என்று கூறி தனது பரப்புரையைத் தொடர்ந்தார்.
இருந்த போதும் அந்த இளைஞர் மீண்டும் சாலை வசதி குறித்து கேள்வி கேட்டதால் பரப்புரையை சுருக்கமாக முடித்துக் கொண்டு பரப்புரை வாகனத்தில் இருந்து கீழ் இறங்கி அவரது காரில் கிளம்பிச் சென்றார்.
இதனிடையே சாலை வசதி கோரி கேள்வி கேட்ட இளைஞரை திமுக நிர்வாகிகள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபடவே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இளைஞரை திமுக நிர்வாகிகளிடமிருந்து மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.
இப்ப பிரச்சனை குறித்து விசாரணை செய்ததில் இளைஞர் கூறிய அழகர்சாமி புறம் அண்ணா நகர் பகுதியில், ஊராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முற்பட்ட பொழுது, நகராட்சிக்கு சொந்தமான பகுதி என கூறி பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் தடுத்ததாக கூறப்படும் நிலையில், பிரச்சாரத்தின் போது இளைஞர் கேள்வி எழுப்பியதாக தெரியவந்துள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.