திருப்பூர், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படிக்கும் தனது தங்கையை அழைத்து வர மாதேஷ் என்ற வாலிபர் வினோத்குமார், தாமஸ்குட்டி உள்ளிட்ட தனது நண்பர்களை அழைத்து சென்றுள்ளார்.
முன்னதாக, வினோத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் மாதேஷ், தனது நண்பர்கள் வினோத்குமார், தாமஸ்குட்டி தனது தங்கையை பள்ளியிலிருந்து வெளியில் அழைத்து வரும் போது உடன் வந்த தாமஸ்குட்டி அங்கு வந்த பள்ளி மாணவி ஒருவரை தாக்கி விட்டு தப்பி உள்ளார்.
இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடன் சென்ற மாதேஷ், வினோத்குமார் இருவரையும் பிடித்து தாக்கினர். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் இளைஞர்களை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட விசாரணையில், தாமஸ்குட்டி அப்பள்ளியில் படிக்கும் மாணவியை விரும்பியதாகவும், இதுதொடர்பாக பள்ளி மாணவியை தாக்கியதாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் பள்ளி மாணவியை தாக்கி விட்டு தப்பி ஓடிய தாமஸ் குட்டியை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.