Categories: தமிழகம்

15 வயது சிறுமியை சீரழித்த இளைஞர்.. அறையில் தங்கவைத்து பல நாட்களாக பலாத்காரம் : 40 வருடம் சிறை விதித்த நீதிமன்றம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,வடசேரி புதுகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சகாய அஜித் வயது (31) இவர் பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமியிடம் நண்பராக பழகியுள்ளார்.

பின்னர் பழக்கத்தை பயன்படுத்தி கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் வேறு ஊருக்கு சென்றனர்.உடனே சகாய அஜித் சிறுமியை அங்கிருந்து கடத்தி வந்து தனது வீட்டின் மாடியில் அடைத்து வைத்து இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பிறகு சிறுமியை அடித்து உதைத்ததோடு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தள்ளி கொலை முயற்சி செய்துள்ளார்.

இதை அறிந்த சகாய அஜித்தின் உறவுக்கார பெண் ஒருவர் அந்த சிறுமியை காப்பாற்றி அவருடைய உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கண்மணி வழக்கு பதிவு செய்து சகாய அஜித்தை கைது செய்தார்.

இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரய்யா சகாய அஜித்தை குற்றவாளி என அறிவித்தார்,

அப்போது சிறுமியை கடத்த்தியது, வீட்டுக்குள் அடைத்து வைத்தல், கொலை முயற்சி,போக்சோ சட்டம், பெண் படும் வன்கொடுமை சட்டம், உள்ளிட்ட குற்றங்களுக்காக 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 33,000 அபராதமும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூபாய் 6 லட்சத்தை அரசு வழங்கவும் உத்தரவிட்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.