மயிலாடுதுறை : மூதாட்டியிடம் தாலிக்கொடியை பறித்து சென்ற மர்மநபர்கள் வேறொரு குற்றவழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை சேந்தங்குடி வள்ளலார் கோயில் ஒத்த தெருவைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி கௌரி (வயது 57). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வள்ளலார் கோயில் அருகில் உள்ள பூக்கடையில் பூ மாலை வாங்கிக்கொண்டு இரட்டைத்தெருவில் சாலையோரமாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயினை பட்ட பகலில் எதிரே சென்று பறித்துள்ளார்.
அவர் செயினை காப்பாற்றிக்கொள்ள போராடிய நிலையில் தாலி செயினை அறுத்து மூதாட்டியை கீழே தள்ளி விட்டு மர்ம நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து மூதாட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி மறைந்துள்ளனர். இதனை அடுத்து தகவலறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிக ளகொண்டு ஆய்வு செய்தனர். செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதையடுத்து தனிப்படைகளை அமைத்து தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில், வாகனத்தை திருடிய வழக்கில் அரியலூர் மாவட்டத்தில் மீன்சுருட்டி அருகே 2 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரும் ஆண்டிமடத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் மணிகண்டன் என்பதும், அவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் வள்ளலார் கோவில் அருகே நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் 5 சவரன் தாலியை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.