மதுரையில் நடந்த கோவில் திருவிழாவில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. திமுக அவைத் தலைவர் ஒச்சி பாலு கூறியதில் கேட்டரிங்க நிறுவனம் அன்னதானம் வழங்கியது.
ஆனால் கேட்டரிங் நிறுவனத்துக்கு பணம் கொடுக்காமல், ஒச்சி பாலு கேட்டரிங் உரிமையாளரை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருட்டும், சுரண்டலும் DMK-வின் அடிப்படை குணாதிசயத்தில் ஆழமாகப் பதிந்துள்ளன.
அக்கட்சியினர் அடிக்கடி வலியுறுத்தும் ‘சமூக நீதி’ என்ற உயர்ந்த கோஷம் நடைமுறையில் வெறும் வாயாடலாகவே மாறி விட்டது. தங்கள் சொந்தக் கட்சி அமைப்பினுள் கூட, உண்மையான சமூக நீதி செயல்படுத்துவதில் DMK தொடர்ந்து தோல்வியடைந்து வந்துள்ளது.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு மதுரையைச் சேர்ந்த DMK நிர்வாகியான ஒச்சு பாலு என்பவரின் நடத்தை. அவரிடம் வேலை செய்து முடித்த ஒருவர் தக்க கூலி கேட்டு வந்தபோது, அவர் அதற்கு பதிலாக சாதி அடிப்படையிலான இழிவுரைகளையும் அவதூறுகளையும் கூறி, பொதுமக்கள் முன்னால் அவமானப்படுத்துவேன் என மிரட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் தனித்துவமானது அல்ல; மாறாக, DMK-வின் உண்மையான முகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியே ஆகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.