பொங்கல் விடுமுறைக்கு கேரளா சென்ற பல் டாக்டர் : வீடு திரும்பியதும் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 January 2025, 5:43 pm

பொள்ளாச்சி பல்லடம் சாலை கே கே ஜி திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள ரத்தினம் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி குடும்பத்தினருடன் கேரளா மாநிலத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருப்பதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Theft in Doctor House

பின்னர் வீட்டுக்கு மருத்துவர் கார்த்திக் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 136 சவரன் நகை மற்றும் ரூபாய் 3 லட்சம் திருட்டுப் போனது தெரியவந்தது.

பின்னர் கொலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தததையடுத்து அங்கு விரைந்த பொள்ளாச்சி Asp சிருஷ்டி சிங் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் .

இதையும் படியுங்க: ஜாமீனில் வெளியே வந்ததும் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. சிவகங்கையில் ஷாக்!

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை பதிவு செய்தும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

theft

குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • After listening to the story, Simbu spat out கதையை கேட்டதும் காரித் துப்பிய சிம்பு… சங்கடத்தில் இயக்குநர்!!