தேனி மாவட்டம் சின்னமனூரில் பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் இல்லங்கள் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக தமிழக முழுவதும் காவல்துறையினர் பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவரது கார் கண்ணாடி உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சார்ந்தவர் பிரபாகரன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். கடந்த இரண்டு தினங்கள் பிரபாகரன் சென்னை சென்று இருந்தார்.
பிரபாகரன் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். சின்னமனூர் தேனி சாலையில் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் அவரது சொந்த இடத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு பிரபாகரன் தனது ஸ்கார்பியோ காரை நிறுத்தி வைத்திருந்து உள்ளார்.
இந்நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து திரும்பியவுடன் தனது இடத்திற்கு வந்துள்ளார். அப்போது தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக சின்னமனூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் கார் கண்ணாடிகள் உடைந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு வேளையில் மர்ம நபர்கள் பிரபாகரனின் கார் கண்ணாடிகளை உடைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கிரே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்.
மேலும் கைரேகை தடவிய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் விசாரணை கொண்டு வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த சின்னமனூர் பகுதியைச் சார்ந்த இந்த முன்னணி, பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட ஏராளமான சம்பவ பகுதிக்கு வருகை தந்தவாறு உள்ளனர்.
பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.