தேனி நகரில் வசித்து வருபவர் 28 வயதான இளைஞர். இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண் முகநூல் மூலம் அறிமுகமாகி பழகி வந்துள்ளார்
அப்போது தான் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் என்றும் தனக்கு 26 வயது ஆகிறது தான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு பழகி வந்துள்ளார்.
மூன்று மாதங்களுக்கு பிறகு மருத்துவ இளைஞரை காதலிப்பதாக நந்தினி கூறிய போது அதனை ஏற்க மறுத்து, பெண்ணிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்
இதனிடையே மருத்துவருக்கு சில நபர்கள் அடிக்கடி ஃபோன் செய்து உங்கள் மீது போக்சோ வழக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறி மிரட்டியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த மருத்துவ இளைஞரை, நந்தினி மீண்டும் தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்த நண்பர்கள் நந்தகுமார் என்பவர் மாவட்ட நீதிபதி, ரெஹிர்சன் என்பவர் வழக்கறிஞர் மற்றும் சென்னையை சேர்ந்த முருகேசன் என்பவர் பிரபல விஐபிக்களிடம் நல்ல நட்புடன் இருப்பவர் எனவும் அறிமுகப்படுத்தி உங்களின் பிரச்சினை நான் சரி செய்து விடுகிறேன் எனக்கூறி வந்துள்ளார்
இதனிடையே மருத்துவரிடம் டிஎஸ்பி, ஐஜி எனக் கூறி போனில் தொடர்பு கொண்டு போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதாக மேலும் சிலர் மிரட்டி வந்துள்ளனர். அப்போது நந்தினி தான் உயர் அதிகாரிகளிடம் பேசி உங்களை கைது செய்யாமல் பார்த்துகொள்வதாக மருத்துவ இளைஞரிடம் ஜிபே மூலமாக தவணையாகவும் 5 லட்சமும், ரொக்கமாக 5 லட்சம் பணம் பெற்று வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நந்தினி வற்புறுத்தி நந்தினியின் நண்பர்கள் உதவியுடன் மருத்துவ இளைஞரை கடத்திச் சென்று சென்னையில் வைத்து சாலையோர கோயிலில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பின் அங்கிருந்து தப்பித்த மருத்துவ இளைஞர் தனது வீட்டில் இது குறித்து தெரிவித்து தேனி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.
மேலும் தன் மீது எந்த வழக்கும் பதியவில்லை என்று தெரிந்து கொண்ட இளைஞர் நந்தினிக்கு 38 வயது ஆகிறது என்றும் போலி ஆதார் கார்டு தயார் செய்து தன்னிடம் 26 வயது போல் நடித்து தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார்.
மேலும் நந்தினி மீது கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தப் பெண்ணால் பாதிக்கப்பட்ட கடைசி இளைஞனாக நானாக இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து தேனி காவல் நிலையத்தில் நந்தினி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்
பணம் பறிக்கும் நோக்கத்தில் திருமணம் ஆகாத இளைஞர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…
பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…
காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…
திருப்பூரில் அஃகேனம் பட முன்னோட்ட நிகழ்ச்சி. நடிகர் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஸ்ரீசக்தி திரையரங்கில்…
This website uses cookies.