நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 130-வது ஆண்டு விழா நடந்தது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஒரு மாணவியை மேடைக்கு அழைத்து தன்னிடம் கேள்வி கேட்க விரும்பினால் கேளுங்கள் என்று கூறினார்.
அதன்படி 2 பேரும் கேள்விகள் கேட்டனர். முதலில் மாணவி கேட்டபோது, நீங்கள் என்னை போன்று ஒரு பெண். கடுமையான முயற்சியால் சாதித்ததாக கூறினீர்கள். இதற்கு மேல் என்ன சவால்களை பெண்கள் சந்திக்க வேண்டும்?என்றார்.
இதற்கு ஆளுநர் தமிழிசை கூறுகையில், பெண் என்றாலே சவாலை சந்தித்து தான் ஆக வேண்டும். அதுவும் அரசியல் கட்சி தலைவராக இருந்தால் அதை விட அதிகமாக சந்திக்க வேண்டும். கடும் விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி உள்ளது.
என்னை பற்றி பல்வேறு விமர்சனங்களை கூறினார்கள். நான் எம்.பி.பி.எஸ். படித்துள்ளேன். நன்றாக பேசுவேன். கவிதை எழுதுவேன். நிர்வாகம் செய்வேன். ஆனால் இதை எல்லாம் யாரும் கூறவில்லை. நீ குட்டையாக இருக்கிறாய். கருப்பாக இருக்கிறாய். சுருட்டை முடியுடன் இருக்கிறாய் என்று தான் கூறினார்கள்.
நல்லதை யாரும் சொல்ல மாட்டார்கள். அடிக்க, அடிக்க எழும் பந்தை போல தன்னம்பிக்கையுடன் உயர வேண்டும். பெண்கள் என்றாலே விமர்சனங்கள் செய்வார்கள்.
எது இருந்தாலும் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல. அரசியல் துறையாக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக மட்டும் அல்லாமல் ஆண்களுக்கு மேல் பணியாற்ற முடியும் என்பதை செயலின் மூலம் காட்ட வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது புதுச்சேரியை தனி மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பீர்களா? என்று கேட்கிறீர்கள். நான் அதற்கு பதில் கூற இயலாது. அதுதொடர்பான கோரிக்கை அங்கு உள்ளது.
ஆனால் அதில் முடிவு எடுக்கும் நிலையில் நான் இல்லை. புதுச்சேரியில் கவர்னராக சிறப்பாக பணியாற்றி வருகிறேன். முதலமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.
நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வருகிறோம். தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் கொண்டு வந்து இருப்பதாக கேட்கிறீர்கள். ஆனால் இதுதொடர்பாக தமிழக அரசிடமும், கவர்னரிடமும் தான் கேட்க வேண்டும்” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.