ஆளே இல்லாமல் ஒரு அணி இருக்கிறது.. அந்த அணி ஓபிஎஸ் அணிதான் : முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சனம்!!
தர்மபுரி மாவட்டம், அரூரில் முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான மா.பா பாண்டியராஜன், செய்தியாளர்களை சந்தித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறும். அ.தி.மு.க. அணியில் இருந்து பா.ஜ. விலகி சென்ற பின் சிறுபான்மை மக்களிடம் பெரியளவில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
தினமும் 1000 -ம் மேற்பட்டோர் அ.தி.மு.க. வில் இணைந்து வருகின்றனர். 52 லட்சம் பேருக்கு பூத் கமிட்டியில் பொறுப்புகள் தரும் ஒரே கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 40 தொகுதிகளிலும் வெல்லும் வகையில் அ.தி.மு.க. அடித்தளத்தை உருவாக்கி உள்ளது.
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி அரசு தான். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ஒழிப்பு என தி.மு.க. கூறியது. ஆனால், ஆட்சிக்கு வந்த 30 மாதங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். பெயருக்கு குடியரசு தலைவர், பிரதமருக்கு கடிதம் எழுதுகின்றனர். இதனால் எந்த பயனும் இல்லை.
நீட் தேர்வு ஒழிப்பு என பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 50 லட்சம் பேரிடம் தி.மு.க. கையெழுத்து வாங்குவது மிகப்பெரிய பகல் வேஷம் நாடகம். இதை மக்கள் உணர்கிறார்கள்.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் அணி அதிமுகவில் இணைந்தால் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ஆளே இல்லாமல் அணி ஒன்று இருக்கிறது என்றால் அது ஓபிஎஸ் அணிதான் என்று சிறிதபடி பதில் சொல்லிச் சென்றார்.
இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட செயலாளர் (ம) முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
This website uses cookies.