வேலூர் : தமிழக அரசு இன்று அறிவித்துள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் மகிழ்ச்சியளிக்கிறது எல்லா பள்ளிகளிலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செகு தமிழரசன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு நேற்று அறிவித்த ஆதிதிராவிட நலத்துறை மாணிய கோரிக்கை பழமையானது. இதில் புதுமையில்லை ஏமாற்றமளிக்கிறது.
இந்த தமிழக அரசின் ஓராண்டு கால சாதனை என்பது அறிவிப்புகள் மட்டும் தான் நிறைவாக உள்ளது. செயல்பாடுகள் குறைவுதான். தமிழக அரசு இன்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கபடும் என முதல்வர் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தபடுகிறது. இங்கும் செயல்படுத்தும் போது அதனை எல்லா பள்ளிகளுக்கும் செயல்படுத்த வேண்டும் இது மகிழ்ச்சியளிக்க கூடிய விஷயமாகும்.
7 தமிழர்கள் விடுதலையில் உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை சரியாக பயன்படுத்தியுள்ளது. தற்போது யாருக்கு எந்தெந்த அதிகாரங்கள் என வரைமுறை செய்ய முடியாத நிலை உள்ளதால் அதிகாரங்கள் அனைவருக்கும் என்பது உண்மையாகும்.
ஆதிதிராவிடர் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை முழுமையாக அரசே செலுத்த வேண்டும். ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் இருந்தது. அதனை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.