பாலியல் தொல்லை போன்றவைகள் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் அதிக அளவில் நடப்பதாக குற்றம் சாட்டிய சிபிஎம் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இந்த பிரச்சனைக்கு முடிவு வரும் என்றார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட குழு நிதி அளிப்பு கோரிக்கை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குருவை சாகுபடி தொடங்கி நடைபெற்று வருகிறது.
வருகிற 31ஆம் தேதிக்குள் காப்பீடு செய்வதற்கான காலம் முடிகிறது ஆனால் காப்பீட்டு நிறுவனங்களை இதுவரை தமிழக அரசு தேர்வு செய்யவில்லை இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் தமிழக அரசே காப்பீடு செய்ய முன்வர வேண்டும் நெல் கொள்முதல் நிலையங்களை தனியார் மையம் செய்யக்கூடாது.
மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என வலியுறுத்திய அவர் பாலியல் தொல்லை மாணவிகள் மர்ம மரணம் தற்கொலை போன்றவை அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் தான் அதிக அளவில் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடம் அனுமதி இன்றி விடுதி நடத்தியது தற்போது தெரியவந்துள்ளது பள்ளிகளை தனியார் நடத்தலாம் என அரசு விட்டதே தவறான கொள்கை முடிவு ஆகும்.
தனியார் பள்ளிகளை ஏதாவது ஒரு வகையில் அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் இது போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.