Categories: தமிழகம்

சாலையில் சென்று கொண்டிருந்த அரசு ஏசி பேருந்தில் திடீர் புகை வந்ததால் பரபரப்பு : அலறிய பயணிகள்!!

தாம்பரம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த அரசு குளிர்சாதன பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பிராட்வேயில் இருந்து தாம்பரம் நோக்கி அரசு குளிர்சாதன பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது திடீரென பஸ்சின் மேற்கூரையில் இருந்து புகை கிளம்பியது.

இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புகை கிளம்புவதாக கூச்சலிட்டனர். இதைக் கவனித்த பஸ் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கிழே இறங்குமாறு அறிவுறுத்தினர்.
பஸ்சின் மேற்கூரையில் புகை கிளம்பும் தகவல் அறிந்ததும் பயணிகளும் அச்சத்தில் அவசர அவசரமாக பஸ்சை விட்டு இறங்கினர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பின்னர், பொதுமக்கள் உதவியுடன் தண்ணீர் ஊற்றி புகை அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.