Categories: தமிழகம்

டாஸ்மாக் கடை வேணும்னு காசு குடுத்து சொல்ல சொன்னாங்க.. 300 ரூபாய்க்கு ஆசைப்பட்டு பொய் சொல்லிட்டோம்.. (வீடியோ)!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமின் போது அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட அரங்காபுரத்தில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டும் என மனு கொடுத்து, செய்தி சேனல்களுக்கு, பேட்டி கொடுத்திருந்தனர்.

இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடை வேண்டாம் என போராட்டம் நடப்பது வாடிக்கையாக உள்ள நிலையில், தங்கள் ஊருக்கு டாஸ்மாக் கடை வேண்டும் என ஒரு ஊரே திரண்டு மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று, அந்த ஊரில் உள்ள பிற பொதுமக்களும், பெண்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

நேற்று ஊரில் இருந்த, விவரம் தெரியாத, முதியவர்களை, திட்டமிட்டு, பணம் தருவதாகவும் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதாவது தங்கள் ஊரில் டாஸ்மாக் கடை அமைக்க, ஒரு நபர் இடம் வழங்கி உள்ளார். ஆனால் பொதுமக்கள் நாங்கள் அதனை வேண்டாம் என தடுத்து வருகிறோம்.

தனது நிலத்தில் டாஸ்மாக் கடை அமைத்து, சந்து கடை மூலம் பல லட்சம் வருமானம் பார்க்கும் நோக்குடன், அந்த குறிப்பிட்ட நபர், திட்டமிட்டு, முதியவர்களை அழைத்துச் சென்று, இத்தகைய மனு கொடுத்துள்ளார்.

இதற்கு சில மது பிரியர்களும் ஆதரவாக செயல்பட்டுள்ளனர். அது முழுக்க முழுக்க, திட்டமிட்டு, பொதுமக்களை 300 ரூபாய் பணம் தருவதாக கூறி அழைத்துச் சென்றது அம்பலம்.

நேற்று, பரபரப்பாக அனைத்து தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியான நிலையில், இன்று ஊர் பொதுமக்கள், அலறி அடித்து, நாங்கள் தெரியாமல் கேட்டு விட்டோம் என புலம்பல்.

டாஸ்மாக் மதுபான கடை அமைக்க, அந்த ஊரைச் சேர்ந்த முக்கிய புள்ளி இடம் கொடுத்திருப்பதாகவும்… அதற்கு ஆதரவு திரட்டும் நோக்குடன், ஊரிலிருந்து விவரம் தெரியாத முதியவர்களை அழைத்துச் சென்று, திட்டமிட்டு, செய்தி பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.