Categories: தமிழகம்

என்னை ஏமாத்திட்டாங்க… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த விவசாயி : பரபரப்பு!!

வாழப்பாடி பகுதியை சேர்ந்த வரதராஜன்(வயது 55) விவசாயியான இவருக்கும் இவரது சகோதரர் ராமசாமி என்பவருக்கும் நிலம் பாகப்பிரிவினை செய்வதில் கருத்து வேறுபாடு இருந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விவசாயி வரதராஜன் இன்று மதியம் மன்னாயக்கன்பட்டி பகுதியில் தனியார் செல்போன் டவர் மீது ஏறினார். பின்பு தற்கொலை செய்துகொள்வதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

வாழப்பாடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையிலான வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயி வரதராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தீயணைப்பு வீரர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏற முற்பட்டார். அப்போது என்னை காப்பாற்ற முயற்சி செய்தால் செல்போன் டவரில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வரதராஜன் குதிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவேளை குதித்தால் விவசாயி வரதராஜனை காப்பாற்ற செல்போன் டவரை சுற்றிலும் வைக்கோல் கட்டுகளை அடுக்கினர்.

அப்போது தவறின் உச்சியில் உட்கார்ந்தபடி கீழே குதிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உச்சி வெயிலில் மயக்கம் வந்த நிலையில் படுத்தபடி போனில் பேசிக் கொண்டிருந்த இந்த போது சாதுரியமாக தீயணைப்பு வீரர்கள் டவர் மீது ஏறி வரதாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்பு விவசாய வரதராஜனின் இடுப்பில் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். தொடர்பான உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி வாழப்பாடி போலீசார் வரதராஜனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் டவர் மீது விவசாயி தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் பகுதியில் குவிந்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு பதற்றமும் ஏற்பட்டது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.