பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆடியோ விவகாரம் குறித்து மதுரை மாநகர காவல் துறை ஆணையாளரிடம் மதுரை மாவட்ட பாஜக புகார் மனு அளித்துள்ளது.
மதுரையில் கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரம் நடைபெற்றபோது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு இருவருக்கும் அவப்பெயர் ஏற்படுத்திய கூறி ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவப்பெயர் ஏற்படுத்த திமுக அரசின் பிண்ணனியில் டாக்டர் சரவணன் ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளார்.
நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தின் பிண்ணனியில் திட்டமிட்ட சூழ்ச்சி உள்ளது. சரவணன் தனது மருத்துவமனையில் செய்த மோசடியை தற்காத்துக் கொள்ள மாநில தலைவர் மீது அவதூறு பரப்புகிறார்.
கார் மீது காலணி வீசிய விவகாரத்தில் விமான நிலையத்திற்குச் செல்லாத பாஜகவினரை கூட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர் என்று சுசீந்திரன் தெரிவித்தார். இதில் மதுரை மாநகர மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
This website uses cookies.