Categories: தமிழகம்

கேள்வி கேட்டா மிரட்டறாங்க… பாராட்டு பத்திரம் வாசிக்கும் இடமாக மாறிவிட்டது : கனிமொழி எம்பி குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி-யில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்,ஆகியோர் எழுத்தாளர் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினர்

இந்த கலை இலக்கிய விருது வழங்கும் விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விருதுகளை வழங்கிய பின்னர் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பேசுகையில், நாடாளுமன்றம் என்பது இன்று கேள்விகள் கேட்கக்கூடாத இடமாகவும் வெறும் பாராட்டு பத்திரங்களை மட்டுமே படிக்க கூடிய இடமாக மாறி வருகின்றது.

நாடாளுமன்றம் என்பது மக்களுடைய பிரச்சினைகள், குறைகள்,அச்சத்தினை எடுத்துரைக்கும் விதமாக இருக்க வேண்டும் ஆனால் கேள்வி நேரத்தில் கூட மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச முடியாத நிலை நாடாளுமன்றத்தில் உள்ளது.

மதுரையில் அமைந்து வரும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த நிலை என்ன என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரிடம் கேள்வி கேட்டால் அவர் அச்சுறுத்தும் விதமாக பதில் அளிக்கின்றார்.

சுறுக்கு கயிறு உங்கள் கழுத்தை நெறிக்கும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு கேள்விக்கு பதில் சொகின்ற அளவிற்கு ஒரு அமைச்சர் பதில் சொல்கின்றார் என்றால் நாட்டின் ஜனநாயகத்தின் நிலை என்னவாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றத்தில் பல அரசியல் இயக்கங்களும் எதிர்கட்சியினரும்,மக்கள் பிரதிநிதிகளும் பிரதமரை நோக்கி கேள்வி கேட்டால் அவர் தரக்கூடிய ஒரே பதில் எதிர்கட்சிகளை சாடுவது எந்த கேள்விக்கும் பதில் கூறாமல் கேள்வி கேட்பதே தவறு என்பதுபோல் கேள்வி கேட்பவர்களை குறைத்து பேசுவது நையாண்டி செய்வது, மிரட்டுவது, அச்சுறுத்துவது போன்ற செயல்களை நாடாளுமன்றத்தில் நாங்கள் பார்த்துகொண்டு இருக்கின்றோம்.

மத்திய அரசை எதிர்த்து மீடியாக்களோ,எழுத்தாளர்களோ கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளது அதைபோல் அரசின் தவறுகளை சுட்டிகாட்டுவது போன்ற ஒரு திரைப்படம் எடுத்தால் கூட அதனை வெளியிட முடியாத நிலை உருவாகி உள்ளது.

இன்று இந்தியா என்பது ஒருவர் அந்த ஒருவர் யார் என்றால் அது பிரதமர்
இந்தியாவின் ஒட்டுமொத்த பிம்பம் என்பது அவராகதான் இருக்க வேண்டும் என்ற நிலையே உருவாக்க துடித்து கொண்டு இருக்கின்றார்கள்.

பிரதமர் மோடிக்கு பின்னால் இருக்கக்கூடிய ஒருவர் யார் என்ற கேள்வியை இன்று நாடே கேட்டுகொண்டு இருக்கின்றது ஆனால் பதில் மவுனம்.
அரசியல் மட்டுமின்றி பதவிகள், ஆளுமை, பொருளாதாரம் என்பது கூட அவர்களது கையில் பறித்து வைத்துகொள்ள கூடிய ஒன்றாக மாறிவிட வேண்டும் என்ற அந்த நிலையை நம்மை தள்ளி கொண்டு இருக்கின்றார்கள்.

இந்த நிலையெல்லாம் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடிய ஒன்றாக எழுத்தும், கலையும்தான் கேள்விகளின் விதைகளாக இருக்க முடியும் இந்த கேள்விகளை நாம் ஒவ்வொரு ஊராக சென்று மக்களிடம் சென்று கேட்க வைக்க வேண்டும் அது ஒன்றுதான் மாற்றத்தினை உருவாக்கும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

4 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

5 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

6 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

6 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

7 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

7 hours ago

This website uses cookies.