பழனி ஆர்.ஜி. நகரில் அடுதடுத்து மூன்று வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி 31 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆர்.ஜி. நகரில் வசித்து வருபவர் கோபி. இவரது மனைவி சர்மிளா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நேற்று இரவு வீட்டில் இருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மூன்று பேர் கொண்ட கும்பல் சர்மிளாவை கத்தி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டியுள்ளனர்.
மேலும் ஷர்மிளாவின் குழந்தைகளை பிடித்து வைத்துக் கொண்டு சர்மிளா அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் உள்ள நகைகளை எடுத்துக் கொடுக்க சொல்லியுள்ளனர்.
உயிருக்கு பயந்து சர்மிளா வீட்டில் உள்ள 27 சவரன் தங்க நகைகளை எடுத்து கொடுத்தவுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் திருட்டு நடந்த இடத்தில் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அதே பகுதியில் உள்ள கருணாகரன் என்பவரின் வீட்டில் நுழைந்த திருடர்கள் நான்கு சவரன் தங்க நகைகளையும் திருடி சென்றுள்ளனர். ஆர்.ஜி. நகரில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையர் புகுந்து திருடிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.