Categories: தமிழகம்

பெண்ணிடம் தாலியை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த கொள்ளையர்கள்.. கரும்பு தோட்டத்தில் SHOCK.. CCTV காட்சி!

பெண்ணிடம் தாலியை பறித்து மின்னல் வேகத்தில் பறந்த கொள்ளையர்கள்.. கரும்பு தோட்டத்தில் SHOCK.. CCTV காட்சி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மனம்பூண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பயின்று வருபவர் ஜாக்குலின் மேரி(39).

நேற்று மாலை மனம்பூண்டி பகுதிக்கு சென்று விட்டு திருக்கோவிலூர் நோக்கி தமது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள், திருக்கோவிலூர் மேம்மாபலத்தில் இருந்து நான்கு முனை சந்திப்பு நோக்கி வந்த போது, ஜாக்குலின் மேரி அணிந்து இருந்த 4.5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு திருக்கோவிலூர் தரைப்பாலம் வழியாக விழுப்புரம் நோக்கி சென்றுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்கள் சென்ற சாலையில் பின்தொடர்ந்து போலீசாரம் சென்றுள்ளனர்.

மேலும் அரகண்டநல்லூர், காணை உள்ளிட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு குற்றவாளியை பிடிப்பதற்காக வாகன தணிக்கையும் செய்யப்பட்டுள்ளது.

அப்போது மாம்பழப்பட்டு அருகே வரும்போது போலீசார் இருப்பதைக் கண்ட கொள்ளையர்கள் வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு அருகாமையில் இருந்த கரும்பு தோப்புக்குள் புகுந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் கரும்பு தொப்பை சுற்றி வளைத்து, இரவு முழுவதும் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை கரும்பு தோப்பில் ஒளிந்திருந்த கொள்ளையர்கள் அபிமன்யம்(23) மற்றும் அருள்ஜோதி(26) ஆகிய இருவரையும் பிடித்து திருக்கோவிலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செயின் பறிக்கப்பட்ட 10 மணி நேரத்திற்குள் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கரும்பு தோப்பில் இரவு முழுவதும் தேடி கைது செய்த பணிப்படை போலீசாருக்கும் DSP மனோஜ் குமாரும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

2 days ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

2 days ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 days ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

2 days ago

This website uses cookies.