தமிழகம்

மீண்டும் ஒரு அதிர்ச்சி.. 3-ம் வகுப்பு மாணவிக்கு நேரக்கூடாத சம்பவம்!

குஜராத்தில் 3ஆம் வகுப்பு மாணவி வகுப்பறைக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அகமதாபாத்: கார்கி ரான்பரா என்ற 8 வயது சிறுமி, குஜராத் மாநிலம், அகமதாபாத் அடுத்த தால்டேஜ் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது, அவர் நிலை சாய்ந்து அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார்.

பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால், அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், இது குறித்து அப்பள்ளியின் முதல்வர் ஷர்மிஸ்தா சின்ஹா கூறுகையில், “கார்கி, வழக்கம்போல் இன்று பள்ளிக்கு வந்தார்.

அவர் அப்போது எப்போதும் போல் மிகவும் இயல்பாகவே இருந்தார். இதனையடுத்து, பள்ளியின் முதல் தளத்தில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, தன்னிலை மறந்த கார்கி, வழியில் உள்ள சேரில் அமர்ந்தார். இதனைப் பார்த்த ஆசிரியர்கள் அவருக்கு சிபிஆர் சிகிச்சை செய்ய முயன்றனர்.

ஆனால், அது பலனளிக்காததால் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைத்தோம். தொடர்ந்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கார்கி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் தற்போது உயிருடன் இல்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: அரை நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாட்டம்… நல்ல வாழ்றாருயா ஹிருதிக் ரோஷன்!

பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், இது மாரடைப்பால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. முன்னதாக, கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் 3ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி, வகுப்பறையிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.