திருச்செந்தூா் அருகே வெடிசத்தம் கேட்டு கீழே விழுந்து பலத்த காயமடைந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே தோப்பூா் பகுதியைச் சோ்ந்தவர். சிவபெருமாள். இவருக்கு செல்வக்குமாரி என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனா். இவரது 2வது மகன் அஜய்குமாா் (10) அங்குள்ள அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
தற்போது அரையாண்டுத் தோ்வு விடுமுறை என்பதால் அந்த பள்ளியில் கழிப்பிட பராமரிப்பு பணி நடைபெற்று வந்துள்ளது. நேற்று அந்த பகுதியில் அஜய்குமார் உள்பட 5 சிறுவர்கள் விளையாடி உள்ளனர். அப்போது அங்கு திடீரென வெடிச்சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவன் அஜய்குமார் கீழே தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அஜய்குமாரை திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து இதுகுறித்து திருச்செந்தூா் கோவில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகபாய் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.