தமிழகம்

விசிக – தவெக மோதலா? ஒத்துக்கொண்ட திருமாவளவன்!

விசிக – தவெக இடையே எந்த சிக்கலும், மோதலும், சர்ச்சையும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அலுவலத்தில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

பின்னர், விசிக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சார்பில் ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அண்மைக் காலமாக பல்வேறு நிகழ்வுகளில் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டதன் மூலம் கட்சியின் நன்மதிக்கும், நம்பகத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சூழல் உருவானது.

எனவே, அது குறித்து தொடர்ச்சியாக அவரிடம் அறிவுறுத்தல் செய்தோம். இருப்பினும், அண்மை நிகழ்வின் அவரது பேச்சு கட்சியின் நன்மதிக்கும், தலைமையின் நம்பகத் தன்மைக்கும் எதிராக அமைந்தது. எனவே, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து, 6 மாத காலம் இடைநீக்கம் செய்திருக்கிறோம்.

அவர் இதற்கு விளக்கம் தருவதற்கான நேரம் இருக்கிறது. பலமுறை அவருக்கு வாய் வழியாக எச்சரிக்கை அளித்திருக்கிறோம். தற்போது அவசர நடவடிக்கையாக இதனைச் செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும், நெருக்கடியும் இல்லை. அவர்கள் அதுப் பற்றி பேசவும் இல்லை” என்றார்.

இதையும் படிங்க: ‘ஆ..ஊன்னா என்னா?’.. ஆட்டம் கண்ட சட்டப்பேரவை.. இபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

மேலும் பேசிய திருமாவளவன், “விஜய் கலந்து கொண்ட விழாவில் நான் பங்கேற்காதது சுதந்திரமான முடிவு. விசிகவுக்கும், தவெகவுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. விஜய் உடன் எந்தவித சர்ச்சையோ, சிக்கலோ ஏற்பட்டது இல்லை.

ஆனால் அவருடன் ஒரே மேடையில் பங்கேற்றால் எங்களது கொள்கைப் பகைவர்கள், எங்களது வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி கதை கட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதால், முன் உணர்ந்து எங்கள் நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்த முடிவு.

அவரோடு நிற்பதை வேறு எந்தக் கோணத்திலும் நாங்கள் தவறாக அணுகவில்லை. எனவே, அவரை வைத்தே புத்தகத்தை வெளியிடலாம் என்று குறிப்பிட்ட ஊடக நிறுவனத்துக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக ஆதவ் அர்ஜூனாவிடம் நான் பேசினேன்.

‘நீங்கள் தாராளமாக இந்த விழாவில் கலந்து கொள்ளுங்கள். அம்பேத்கர் பற்றி பேசுங்கள், நூலின் பின்னணி பற்றி பேசுங்கள். அரசியல் பேச வேண்டாம்’ என்று வழிகாட்டுதல்களை நான் கூறினேன். ஆனால் அவர் பேசிய பேச்சு, விசிகவின் நம்பகத் தன்மையை நொறுக்கும் அளவுக்கு அமைந்துவிட்டது. மாற்றுக் கட்சியினர் ஒரே மேடையை பகிந்துகொள்ளலாம். ஆனால், தமிழ்நாட்டில் அந்த மாதிரியான ஒரு சூழல் இல்லை’ எனக் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.