நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலுக்கும் INDIA கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன், இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லி சட்டமன்றத் தேர்தலில், பாஜக முன்னிலையில் இருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை.
டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமானால், அது தேசத்துக்கான ஒரு பின்னடைவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது. நியாயமான முறையில் டெல்லியில் தேர்தல் நடந்திருக்குமா? என்ற ஐயத்தை இந்த முன்னிலை நிலவரங்கள் எழுப்புகின்றன. INDIA கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலைச் சந்திக்கவில்லை. INDIA கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில் ஆய்வு செய்ய வேண்டும். INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும், மக்களையும் காப்பாற்றும் திசையில் சிந்திக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டமன்றத் தேர்தலுக்கும் INDIA கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, டெல்லி தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாகக் கொண்டு, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது.
இதையும் படிங்க: கை கொடுத்த காங்கிரஸ்.. 15 ஆண்டுகளாக கைவிட்ட டெல்லி.. தலைநகரில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்பார்த்தவாறு, திமுக மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி, திமுக பெறும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
மேலும், டெல்லியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. அதேநேரம், ஆம் ஆத்மி எதிர்கட்சி வரிசையிலும், காங்கிரஸ் சட்டமன்றத்திற்கு வெளியிலும் இருக்க உள்ளது. மேலும், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.