தமிழகம்

“நாங்கள் விலகியிருக்கிறோம்”.. மீண்டும் அரசியல் அக்கணம் வைத்த திருமாவளவன்!

நாங்கள் விலகி இருக்கிறோம், ஒதுங்கி இருக்கிறோம், ஒரே மேடையில் பங்கேற்றாள் அரசியல் சாயம் பூசுவார்கள் என திருமாவளவன் கூறியுள்ளார்.

அரியலூர்: ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை தனியார் மாத இதழ் தனது பதிப்பகத்தின் மூலம் இன்று வெளியிடுகிறது. இந்த நிகழ்வில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பங்கேற்று நூலை வெளியிடுகிறார். இதனை ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜூனா கலந்து கொள்கிறார்.

முன்னதாக, இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியானது. இதனால் அரசியல் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், அதிகாரப் பகிர்வு குறித்து பேசிய வீடியோ வைரலாகி, அது திமுக கூட்டணியில் சலசலப்பையும் ஏற்படுத்தி இருந்தது. ஆனால், நாங்கள் கூட்டணியில் இணக்கமாகத்தான் இருக்கிறோம் என திருமாவளவனே விளக்கி இருந்தார்.

அதேநேரம், தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்திய விஜய், தம்மோடு வருபவர்களுக்கு அதிகாரத்திலும் பங்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார். இது திருமாவளவனுக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு என அரசியல் விமர்சகர்கள் கருதினர். இந்தச் சூழ்நிலையில் தான் விசிக தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய் உடன் ஒரே மேடையில் சந்திக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், இறுதியாக, அதிகாரப்பூர்வமான அழைப்பிதழில், ஆதவ் அர்ஜுனா பங்கேற்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்த திருமாவளவன், தன்னை வைத்து அரசியல் எதிரிகள் காய்களை நடத்தப் பார்க்கின்றனர் என கூறியிருந்தார். இந்த நிலையில், அரியலூரில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த திருமாவளவன், “தவெக தலைவர் விஜயும், நானும் ஒரே மேடையில் நின்றால் நிச்சயம் அரசியல் சாயம் பூசுவார்கள்.

இதையும் படிங்க: 6 பொணத்த காணோம்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான நேரம் வரும் என சிலர் காத்திருக்கின்றனர். எனவே, அதற்கான வாய்ப்பை கொள்கைப் பகைவர்களுக்கு தந்துவிடக் கூடாது என்பதற்காக விலகியிருக்கிறோம், ஒதுங்கியிருக்கிறோம். விஜய்க்கும், எங்களுக்கும் எந்த சிக்கலும் இல்லை, எந்த முரண்பாடும் இல்லை. அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் சாயம் பூசியதால் சிக்கல் எழுந்தது” எனக் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

9 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

11 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

11 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

12 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

12 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

13 hours ago

This website uses cookies.