அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விழுப்புரம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தேர்தல் அங்கீகார பெருவிழா பொதுக்கூட்டம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, விழா மேடையில் பேசிய திருமாவளவன், “நடிகர்கள் கட்சி தொடங்கினால் விசிக பலவீனம் அடையும் என ஊடகங்ளில் எழுதுவார்கள். தேமுதிக தொடங்கப்பட்டபோது விசிக பலவீனமடையும் என எழுதினார்கள். விசிகவை யாரும் சேதப்படுத்த முடியாது. நம்முடைய கொள்கை, களம் என்பது புதியது.
சினிமா கவர்ச்சியின் மூலம் இளைஞர்களை திசைத்திருப்பி, மடை மாற்ற முடியாது. அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கையால் உள்வாங்கிய இளைஞர்களை மடைமாற்ற முடியாது. கொள்கை அளவில் பன்பட்ட இயக்கமாக விசிக திகழ்கிறது. இதனால்தான் பல கட்சி தலைவர்கள் வாழ்த்தி அங்கீகரித்துள்ளனர்.
கொள்கை பிடிப்புள்ள இளைஞர்களை அணிதிரட்ட களத்தில் இறங்கினேன். தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராவோம் என்றோ வரவில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் தாக்கு பிடிக்கிறோம், அதுதான் வெற்றி.
இதையும் படிங்க: தனுசுக்கு கதை ரெடி…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த சுவாரசிய அப்டேட்.!
ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை, ஆனால் அடுத்த முதலமைச்சர் என ஊடகங்களில் எழுதுகிறார்கள். நான் நடிகராக இருந்திருந்தால், தலித் அல்லாதவராக இருந்திருந்தால், அடுத்த முதல்வர் என எழுதியிருப்பர். இன்றைக்கும் நமக்கு அரசியலில் பேரம் பேச தெரியவில்லை.
பேரம் முக்கியமல்ல, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூடுதலான இடங்களிலும் போட்டியிட வேண்டும் என கேட்டுப் பெற முயற்சிப்போம். ஆனால், அதிக இடங்களுக்காக கூட்டணிக்காக அணி மாறுவோம் என நினைக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.