தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் உருவாக்குவார்கள் என்ற வசனத்தை, விடுதலை 2 படத்தைப் பார்த்துவிட்டு திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி உள்ள விடுதலை 2 படத்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் நேற்று பார்த்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மகத்தான படைப்பாக விடுதலை 2 படம் வெளிவந்துள்ளது.
வெற்றிமாறன் இதுவரை இயக்கியுள்ள அனைத்துப் படங்களுமே மக்கள் செல்வாக்கோடு மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறது. அந்த வகையில், இதுவும் ஒரு வெற்றிகரமான திரைப்படம். அதேநேரம், இந்தப் படம் பேசியிருக்கக்கூடிய அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டு தேர்தல் களத்தில் பங்கேற்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசும் அரசியல், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மறுத்து மக்களை அரசியல்படுத்தி, புரட்சிகர ஜனநாயகத்தை வென்றெடுக்க வேண்டும் எனப் பேசுகிற கம்யூனிஸ்ட் அரசியல் இன்னொன்று.
கம்யூனிஸ்ட் கட்சிகளில் இரண்டு வகைகள் உள்ளன. மக்களை அரசியல்படுத்தி, அமைப்பாக்கி போர்க்குணம் மிக்கவர்களாக வளர்த்தெடுக்கக்கூடிய அரசியல் இன்றைக்கு இந்தியாவில் மாவோயிஸ்ட் என அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது வகை அரசியலை, நுட்பமாகப் பேசுகிற, விவாதிக்கிற களமாகத்தான் விடுதலை 2 அமைந்துள்ளது.
தமிழ் சூழலுக்கு ஏற்ப தமிழ்த்தேசிய இன விடுதலைக்கான அரசியலை முன்னெடுத்த போராளிகளைக் கருப்பொருளாக கொண்டு இந்த திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் உருவாக்குவார்கள், போராளிகளை உருவாக்க முடியாது என ‘விடுதலை 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற வாசகம் தற்போதைய சூழலுக்குப் பொருத்தமாக உள்ளது. இதனை நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை” என அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக… புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படம்!!
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் விடுதலை 2. இப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதேநேரம், பல தீர்க்கமான அரசியல் விமர்சனங்களையும் இப்படம் எதிர்கொண்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.