தமிழகம்

துக்க நிகழ்வில்கூட பங்கேற்க தடை? திருமா திமுக பற்றி கூறியது உண்மைதானா?

வேங்கைவயலில் துக்க நிகழ்வில்கூட வெளியூர் உறவினர்கள் பங்கேற்க தடை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வேங்கைவயலை தனித்தீவாக போலீசார் மாற்றி உள்ளனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த குற்றச்சாட்டு பரபரப்புக்கு உள்ளான நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் கருப்பாயி என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த வெளியூர் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. அதேநேரம், உயிரிழந்த மூதாட்டி சிபிசிஐடி போலீசார் சுட்டிக்காட்டிய காவலர் முரளி ராஜாவின் பாட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “வேங்கைவயல் விவகாரத்தில் புலன் விசாரணையில் கிடைத்த ஆதாரம் என்ற அடிப்படையில் ஏற்கனவே வெளியிட்ட ஆடியோவைத் தான் வெளியிட்டனர்.

இதையும் படிங்க: அரசியல் அழுத்தமா? ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

டிஎன்ஏ முடிவு அடிப்படையில் தான் இந்த முடிவுக்கு வந்தோம் எனக் கூறும் அவர்கள், அது குறித்து எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. தாயும், மகனும் பேசிய பேச்சை ஆதாரமாகத் தருவது பெரும் அதிர்ச்சியையேத் தருகிறது. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.