தமிழகம்

துக்க நிகழ்வில்கூட பங்கேற்க தடை? திருமா திமுக பற்றி கூறியது உண்மைதானா?

வேங்கைவயலில் துக்க நிகழ்வில்கூட வெளியூர் உறவினர்கள் பங்கேற்க தடை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் எம்பியுமான திருமாவளவன், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “வேங்கைவயலை தனித்தீவாக போலீசார் மாற்றி உள்ளனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த குற்றச்சாட்டு பரபரப்புக்கு உள்ளான நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் கருப்பாயி என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த வெளியூர் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. அதேநேரம், உயிரிழந்த மூதாட்டி சிபிசிஐடி போலீசார் சுட்டிக்காட்டிய காவலர் முரளி ராஜாவின் பாட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “வேங்கைவயல் விவகாரத்தில் புலன் விசாரணையில் கிடைத்த ஆதாரம் என்ற அடிப்படையில் ஏற்கனவே வெளியிட்ட ஆடியோவைத் தான் வெளியிட்டனர்.

இதையும் படிங்க: அரசியல் அழுத்தமா? ஜனநாயகன் ரிலீஸ் ஆவதில் சிக்கல்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்!

டிஎன்ஏ முடிவு அடிப்படையில் தான் இந்த முடிவுக்கு வந்தோம் எனக் கூறும் அவர்கள், அது குறித்து எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. தாயும், மகனும் பேசிய பேச்சை ஆதாரமாகத் தருவது பெரும் அதிர்ச்சியையேத் தருகிறது. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

7 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

8 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

8 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

8 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

9 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

9 hours ago

This website uses cookies.