Categories: தமிழகம்

திமுக அமைச்சருக்கு எதிராக திருமாவளவன் திடீர் போர்க்கொடி : மின் கட்டண உயர்வை நியாயப்படுத்த முடியாது என கருத்து…!!

மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் கருத்து சொல்லி இருக்கிறார் அந்த கருத்தை நியாயப்படுத்த முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளரிடம் கூறுகையில், பாராளுமன்றத்தில் ஆளும் பாஜக அரசு ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை பேசுவதற்காக 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில் குறிப்பாக நாலு பேர் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பாசிச அரசு என்பதற்கு எடுத்துக்காட்டு.

விலைவாசி உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது பாஜக அரசு எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பாஜக அல்லாத மாநிலங்களை ஆட்சி புரியும் தலைவர்கள் போன்றவர்களை மத்திய அரசின் புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் அச்சுறுத்தி வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது குறிப்பாக கனியாமூர் சம்பவத்தில் மாணவி ஸ்ரீமதி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என பிணக்கூறு ஆய்வுகள் தெரிவிக்கும் வகையில் உள்ளது.

ஆனால் அந்தச் சம்பவங்கள் மறைக்கப்பட்டு மடைமாற்றம் செய்யப்பட்டு பள்ளிக்கூடத்தை தாக்கியவர்கள் கலவரத்தை உண்டாக்கியவர்கள் என திசை திருப்பும் செயல் நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உளவுத்துறை தலித் இளைஞர்களால் வன்முறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறியிருப்பது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே ஸ்ரீமதி சாவுக்கு நீதி வேண்டும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமரை அமர வைத்து தமிழர்களின் பாரம்பரியம் குறித்து தமிழக முதல்வர் பாடம் எடுத்திருக்கிறார்.
என்எல்சி நிர்வாகத்தில் பொறியாளர் தேர்வில் தமிழர் ஒருவர் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கனியாமூர் மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உளவுத்துறை மற்றும் காவல் துறை விழிப்பாக செயல்பட்டிருந்தால் கலவர சம்பங்கள் நடந்திருக்காது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

மேலும் தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து தனி கண்காணிப்பு கொண்டு வர வேண்டும் அதற்கு தமிழக அரசும் முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் கருத்து சொல்லி இருக்கிறார் அந்த கருத்தை நியாயப்படுத்த முடியாது.

சாதாரண ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும் மின்கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும் என அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

2 days ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

2 days ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 days ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 days ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

2 days ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

2 days ago

This website uses cookies.