Categories: தமிழகம்

தமிழக மீனவர்களை கொன்னுட்டு இங்க வந்து வியாபாரம் பண்ண முடியுமா?.. பிரதமருக்கு திருமுருகன் காந்தி எச்சரிக்கை..!

தமிழக மீனவர்களை கொன்று விட்டு தமிழகத்தில் வியாபாரம் செய்து விட முடியாது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவிற்க்கு எச்சரிக்கை செய்கிறோம் என மதுரையில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி

மதுரையில் உள்ள இலங்கை நாட்டை சேர்ந்த தொழில் அதிபருக்கு சொந்தமான தம்ரோ பர்னிச்சர் கடையை இழுத்து மூடும் போராட்டம் நடைபெற்றது, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர் கொலை செய்யப்பட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை அண்ணா நகரில் உள்ள தம்ரோ பர்னிச்சர் கடை அருகே போராட்டம் நடைபெற்று, 850 இக்கும் மேற்பட்ட மீனவர்களை கொலை செய்த இலங்கை நாட்டின் மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என போராட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆதி தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன், மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜக்கையன் கூறுகையில் “இந்திய அரசின் நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொலை செய்யப்படும் போது இந்திய அரசு மவுனம் காக்கிறது, 850 மீனவர்கள் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

ஆனால் இதுவரை எந்தவொரு மீனவருக்கும் இழப்பீடு வழங்கவில்லை, இலங்கை அரசு மீது ஒன்றிய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்” என கூறினார், பின்னர் மே பதினேழு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறுகையில் “சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் கூறுகிறார், வீடு வீட்டுக்கு தேசிய கொடியை ஏற்றினால் இலங்கை கடற்படையிடம் இருந்து ஒன்றிய அரசு தமிழக மீனவர்களை காப்பாற்றி விடுமா?, 2021 ல் குஜராத் மீனவர் கொலை செய்யப்பட்ட போது பாக்கிஸ்தான் தூதர் நேரில் அழைக்கப்பட்டு கண்டனம் பதிவு செய்யப்பட்டது

குஜராத் மீனவருக்கு ஒரு நீதி, தமிழக மீனவருக்கு ஒரு நீதியா?, மீண்டும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்தினால் தமிழகத்தில் உள்ள இலங்கை நிறுவனங்கள் அப்புறப்படுத்தப்படும், தமிழகத்தில் 1 ட்ரில்லியன் பொருளாதார வாய்ப்புகள் உள்ளதால் தமிழ் மொழியை கற்று கொண்டு தமிழகத்தில் வியாபாரம் செய்யுங்கள் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே சில நாட்களுக்கு முன்னர் இலங்கை தொழில் அதிபர்களிடம் பேசி உள்ளார்.

தமிழக மீனவர்களை கொன்று விட்டு தமிழகத்தில் வியாபாரம் செய்து விட முடியாது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவிற்க்கு எச்சரிக்கை செய்கிறோம், சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் மீனவர் கொலைக்கு காரணமான இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி விரைவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்” என கூறினார்.

Poorni

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

14 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

16 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

16 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

17 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

17 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

18 hours ago

This website uses cookies.