நாட்றம்பள்ளி அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் விலை செய்யப்பட்டதை எதிர்த்து கேட்ட மது பிரியரை ஆபாச வார்த்தையில் அர்ச்சனை செய்த விற்பனையாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வீரகாமோடு அருகில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 1000 க்கும் மேற்பட்டோர் மது வாங்கி செல்கின்றனர். இன்று வழக்கம் போல மது வாங்க மது பிரியர்கள் கடைக்கு வந்தனர்.
ஒரு குவாட்டர் எம்.ஆர்.பி விலை 130 ரூபாய் என இரண்டு குவாட்டர் வாங்கி உள்ளார். ஆனால் விற்பனையாளர் எம்.ஆர்.பி விலையை விட 10 ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளார். இதனால் மது பிரியார் ஒருவர் ஒரு குவாட்டர் 130 ரூபாய், இரண்டு கோட்டர் 260 ரூபாய் தான் விலை எனவும், மீதமுள்ள 10 ரூபாய் பணத்தை தாருங்கள் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு விற்பனையாளர் நக்கலாக அவ்வளவுதான் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், விற்பனையாளர் மதுப்பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனை அருகில் உள்ளவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களை பரவச் செய்தார்.
இதனால் கூடுதலாக மது விற்பனை செய்யும் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.