திருப்பூர் : திருப்பூரில் அரசு பள்ளிகளில் மதமாற்றம் நடந்தது உண்மையா..? என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவலை ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ளார்.
திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவியை ஆசிரியர் ஒருவர் மதமாற்ற முயற்சி செய்ததாக மாணவியின் பெற்றோர் மற்றும் இந்து முன்னணி சார்பில் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆசிரியை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, இந்து இளைஞர் முன்னணி சார்பில் இரண்டு முறை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு பள்ளிகளிலும் மதம் மாற்றம் தொடர்பான புகார் இல்லை எனவும், ஜெய்வாபாய் பள்ளியில் மதமாற்ற முயற்சித்ததாக வந்த புகாரில் உண்மையில்லை எனவும், பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் பொய்யான தகவல்களை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைத்து இருப்பதாகவும், திருப்பூர் மாவட்டத்தில் ஏதேனும் பள்ளிகளில் இதுபோல் புகார்கள் இருந்தால் மாணவ மாணவிகள் 1098 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்தார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.