திருவள்ளூர் : தச்சூரில் அரசு பேருந்தில் பயணியை நடத்துனர் அடித்து உதைத்து தாக்கும் காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக தளங்களில் வைரலாகி வருகிறது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அரி என்பவர் தனியார் நிறுவன ஊழியராவார். இவர், கடந்த 6ம் தேதி கவரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சூர் பகுதியில் செங்குன்றம் செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, படிக்கட்டில் நிற்க கூடாது என பேருந்து நடத்துனர் தேவன் தெரிவித்த போது, அவரை அவதூறாக பேசி தாக்கியதாகவும், நடத்துனரும் அவரை உதைத்து தாக்கியுள்ளார். இது குறித்து இருவரும் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி வழக்கை முடித்து போலீசார் எச்சரித்து இருவரையும் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நடத்துனர் தேவன், அரியை தாக்கும் வீடியோ வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.