பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி வெட்டிப்படுகொலை… மதுபான பாருக்குள் முகத்தை சிதைத்து கொடூரக்கொலை

Author: Babu Lakshmanan
9 May 2022, 2:06 pm
Quick Share

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே பிரபல ரவுடி ஒத்த கை மூர்த்தி மதுபான பாருக்குள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் வாயலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஒத்தக்கை மூர்த்தி (50). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், பிரபல ரவுடியாக அப்பகுதியில் வலம் வந்தார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள மதுபான பாரை எடுத்து நடத்தி வந்துள்ளார்.

இன்று காலை அவர் மதுபான பாரில் இருந்தபோது 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக முகத்தை சிதைத்து வெட்டிப் படுகொலை செய்தது. இதனை பார்த்தவர்கள் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

இதனிடையே, கொலைக்கு பயன்படுத்திய இரண்டு கத்திகளை கொலையாளிகள் அங்கேயே குப்பையில் வீசி சென்றனர். அதை போலீசார் பறிமுதல் செய்து, கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதனால் ஒத்த கை மூர்த்தி கொலை செய்யப்பட்ட பகுதியில் வியாபாரிகள் கடைகளை அடைத்து உள்ளனர்.

Views: - 791

0

0