திருவள்ளூர் அருகே பூ வியாபாரி வீட்டின் உள்ளே புகுந்து 30 சவரன் தங்க நகைகளை பீரோவில் இருந்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம் அருகே உள்ள பாலேஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் பூ வியாபாரி முனுசாமி. இவரது மனைவி உமாராணி மற்றும் மருமகன் மணிகண்டன் ஆகியோருடன் குடும்பத்துடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 30 சவரன் தங்க நகைகளை அங்கிருந்த சாவியைப் போட்டு திருடி சென்றனர்.
தூங்கி எழுந்து பார்த்தபோது நகைகள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, பீரோவில் இருந்து நகைகளை திருடி விட்டு நகைகள் வைக்கப்பட்டிருந்த காலி பை மற்றும் நகை இருந்த காலி பெட்டிகளை ஆரணி ஆற்றின் கரையை ஒட்டிய பகுதியில் வீசி சென்று உள்ளனர்.
நகைகளை திருட வந்தவர்கள் மயக்க மருந்து அடித்து அவர்கள் மயக்கம் அடைந்த நிலையில், சாவி போட்டு பீரோவில் இருந்து நகைகளை திருடி சென்றனரா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.