திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 10 சவரன் நகை பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் தசரத நகரில் நீதிபதி, மேஜிஸ்திரேட் என முக்கிய அரசு அலுவலர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களது வீடுகளின் அருகே லாரி மெக்கானிக் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். நேற்றிரவு வீட்டை உள்பக்கம் தாழிட்டு குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தார்.
அதிகாலை 3 மணியளவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் கோபாலகிருஷ்ணன் மனைவி சாந்தகுமாரி கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி சரடு மற்றும் தங்க சங்கிலியை பறித்து கொண்டு வெளியே காத்திருந்த தனது கூட்டாளியுடன் தப்பியோட்டம் பிடித்தார்.
இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிபதி, மேஜிஸ்திரேட் வீடுகளின் அருகே நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.