திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 28கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக எல்லை வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக ஆந்திர எல்லையில் காவல்துறையினர் தீவிர வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தொடர்ந்து பேருந்துகளில் சோதனை செய்து கடந்த ஏழு நாட்களில் மட்டும் சுமார் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், நேற்று காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்க்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேட்பாரற்று கிடந்த 11 கஞ்சா பொட்டலங்களையும், மூன்று பாலிதீன் கவர்களில் வைக்கப்பட்டிருந்த 28 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால் போலீசாரின் சோதனையை கண்ட கஞ்சா கடத்தல் கும்பல் தப்பித்துச் சென்றதால், கடத்தல் கும்பலை கைது செய்ய முடியவில்லை எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.