திருவள்ளூர் : மீஞ்சூரில் தலைமை காவலர் யுவராஜ் என்பவர் தன்னைத்தானே மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் வசித்து வந்தவர் யுவராஜ் (54). இவரது மனைவியின் பெயர் சாமுண்டீஸ்வரி. இவருக்கு ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் மகனும் உள்ளார். யுவராஜ் எண்ணூர் E4 காவல் நிலையத்தில் தலைமை காவலராக 1997 ஆம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. வீட்டில் இருந்த யுவராஜ் யாரும் இல்லாத நேரத்தில் தன் மணிக்கட்டில் பிளேடால் அறுத்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட இருந்துள்ளார். இதை பார்த்த பக்கத்து வீட்டார், இவரை அருகில் உள்ள மீஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என்று கூறி விட்டனர்.
இதனை அடுத்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்கு பதிந்து குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.