திருவள்ளூர் : புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் சிறைக்காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காசிராமன் (29), கடந்த 2017இல் சிறை காவலராக சேர்ந்து புழல் விசாரணை சிறையில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தமது மனைவி சரண்யாவுடன் புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
நேற்றிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் காவலர் காசிராமன் படுக்கையறையின் கதவை தாழிட்டு கொண்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி கதவை தட்டியும் திறக்காததால் அருகில் இருந்தவர்களை உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறைக் காவலர்கள் குடியிருப்பில் சிறைக்காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.