திருவள்ளூர் அருகே வடிவேல் திரைப்பட காமெடி காட்சி போன்று சுவற்றில் துளை போட்டு அரசு டாஸ்மாக் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்த கொள்ளையர்கள் இருவரை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைபேட்டை தண்டலசேரி அருகேயுள்ள டாஸ்மாக் அரசு மதுபான கடையின் சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்த இருவர் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணிக்கு சென்ற போலீசார், பதிவேடு கையெழுத்திட சென்றபோது மதுபான கடையை சுற்றிப் பார்த்துள்ளனர்.
அப்போது, மதுபான கடையின் சுவற்றின் துளைபோட்டு இருவர் மதுபான கடையில் குடித்துக் கொண்டிருந்ததை பார்த்த போலீசார், இருவரையும் கையும் களவுமாக சுவற்றின் வழியாக வெளியேற்றி பிடித்து கைது செய்தனர்.
பள்ளிக்கரணையை சேர்ந்த சதீஷ், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த முனியன் ஆகிய இருவரை கைது செய்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபான கடையில் கொள்ளை அடிக்க வந்த இருவரும் குடித்துவிட்டு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.